கூடுவிட்டு கூடு பாய்ந்து இளம்பெண்ணின் நடத்தைகளை கூறும் சித்தர்..!! வீடியோ
அழகிய வெண்ணிலவு, ஆர்ப்பரிக்கும் கடல், குபு குபுவென புகையை கக்கிக்கொண்டு மலையடிவாரத்தில் ஓடிவரும் ரெயில், இவைகளை எல்லாம் எத்தனைமுறை பார்த்தாலும் சலிப்பு வருவதில்லை. உறங்குகிற நாராயணனை துயில் எழுப்புகிற வெங்கடேச சுப்ரபாதம் காலை பொழுதை புத்துணர்ச்சியோடு வரவேற்கும்.
புல்லாங்குழலின் பூபாள ராகம், மலை உச்சியில் இருக்கும் கோவில் மணியோசை காதில் வந்து விழுவது தினசரி நடந்தாலும் அதை கேட்பதற்கு சலிப்பே ஏற்படுவது கிடையாது. இதே போலத்தான் சித்தர்களை பற்றி ஆயிரம் அறிந்திருந்தாலும் பலநூறு சங்கதிகளை ஆய்வு செய்திருந்தாலும் புதியதாக யாராவது ஒருவர் கூறத் துவங்கினால் நமக்குள் ஆர்வம் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்துவிடும்.
காரணம் சித்தர்களை பற்றி நமது மனதிற்குள் கட்டி வைத்திருக்கின்ற கற்பனை கோட்டை சித்தர்களை நாடினால் பெறமுடியாத பெரும் பேறுகளை எல்லாம் பெற்றுவிடலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. இவை மட்டுமல்ல சித்தர்கள் ஆகாய வழியாக பறந்து செல்வார்கள். அலைகளே வீசாத நடுக்கடலில் நடந்து போவார்கள்.
சுற்றி சுழன்றடிக்கும் சூறாவளி காற்றை கைப்பிடிக்குள் அடக்கி விடுவார்கள், ஆக்ரோஷமாக ஆகாயத்திற்கும் பூமிக்கும் எழுந்து நின்று ஆர்ப்பாட்டமாக பற்றி எரியும் நெருப்பை கூட வாயினால் ஊதி அனைத்து விடுவார்கள், என்று எத்தனையோ எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது வைத்திருக்கிறோம்.
அந்த வகையில் தான் இந்த வீடியோவில் உள்ள விடயமும், ஒரு சித்தர் தான் உட்கார்ந்த இடத்திலிருந்தே கூடுவிட்டு கூடு பாய்ந்து ஒரு இளம்பெண் வீட்டில் என்ன செய்கிறார், அவர் வீடு எந்தப் பக்கமான வாசலை உடையது. அவர் வீட்டு பூஜை அறையில் எந்த விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை மிகச் சரியாக கூறுகிறார்.
வீடியோவைப் பாருங்கள் உங்களுக்கே புரியும்…
Average Rating