பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று சொன்னா எப்படி தாங்கிக்க முடியும்? கண்கலங்கிய பரணியின் மனைவி..!!
என் கணவரால் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று கூறியதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று பரணியின் மனைவி கண்கலங்கி பேசியுள்ளார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலிருந்து என் கணவர் அவப்பெயரோரு மற்றவர்களால் வெளியேற்றப்பட்டார்.
அவருக்கு கசப்பான அனுபவங்கள் நிறைய நடந்திருக்கு என்பதை பிக்பாஸ் பார்த்து தெரிந்துகொண்டே என்று பரணியின் அன்பு மனைவி ரேவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும், பரணி கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறும் நம்பிக்கையோடுதான் கலந்து கொண்டார். அவருக்கு யாரையும் காயப்படுத்த தெரியவே தெரியாது.
எப்போதும் பொறுமையாக இருப்பவர். அவரும் கடைசி வரை பொறுமையாகத் தான் இருந்துள்ளார் என்பது நிகழ்ச்சியைப் பார்த்த அனைவருக்கும் தெரியும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பட்ட கஷ்டங்களை பார்க்கும் போது நானும், எனது குடும்பத்தாரும் அப்படியே அழுதுட்டோம். ஒருவேளையாவது நிம்மதியா சாப்பிட்டாரா, இல்லையா என்று கூட எங்களுக்கு தெரியாது.
தினமும் நான் கோவிலுக்குப் போய் அவர் சீக்கிரம் வந்துவிட வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்.
எவ்வளவு பெரிய போட்டியாக இருந்தாலும் அதனை ஈஸியாக செய்வார். ஆனால், தப்பே பண்ணாதவர். இப்படியிருக்கும் போது என் கணவரால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லைனு சொன்னா எப்படி தாங்கிக்க முடியும்?
ஜூலிக்கு ஆதரவாக இருந்ததற்கு அவரே ஆதரவு தராதது எனக்கு வருத்தமளிக்கிறது. பிக்பாஸ் வீட்டிலிருந்து யார்கிட்டேயும் சொல்லிக்காமல், அவங்க முகத்தில் கூட முழுக்காமல் வந்ததற்கு நான் சந்தோஷப்படுகிறேன். அவரைப் பார்த்த என் குழந்தைகள் அப்படியே கட்டிப்பிடிச்சு அழுதுட்டாங்க.
அவருக்கு இனிப்பு கொடுத்தேன். குடும்பத்தோடு கோவிலுக்குப் போனோன். அவருக்கு அசைவ சாப்பாடு சமைத்துக் கொடுத்தேன். அதன் பிறகு கமல்சார் கூட பேசும்போது குடும்ப உறவுகளை விட்டுவிட்டு இராணுவம், கப்பல் போன்றவற்றில் வேலை செய்கிற ஆண்கள் கிரேட் சார். அவங்களுக்கு சல்யூட் அடிக்கனும் சார் என்று சொன்னார்.
ஆம், அது உண்மை தான். எத்தனையோ பேர் தங்களது குடும்ப உறவுகளை விட்டுவிட்டு வெளியூர், வெளிநாடு என்று போய் வேலை செய்கிறார்கள் அவர்களுக்கு நான் சல்யூட் அடிக்கிறேன் என்று ரேவதியும் கூறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து என் கணவர் வந்திருக்கக் கூடாது. அவர், எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் என் கணவர் வந்தது எனக்கு சரிதான் என்று தோன்றுகிறது. அவருக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்று கூறியுள்ளார்.
Average Rating