ஓடும் ரயிலில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய இளைஞர்: திறமையாக காப்பாற்றிய காவலர்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 13 Second
சென்னையில் ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி இழுத்துச்செல்லப்பட்ட இளைஞரை காவலர் ஒருவர் திறமையாக காப்பாற்றியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. எழும்பூர் நிலையத்திலிருந்து தாதர் எக்ஸ்பிரஸ் புறப்பட சென்றுக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் ஓடும் ரயில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது, தவறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டுள்ளார். அப்போது, பணியில் இருந்த காவலர், உடனே அந்த இளைஞரை பிடித்து திறமையாக வெளியே இழுத்து காப்பாற்றியுள்ளார்.
ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை கண்ட பலர் காவலரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
Average Rating