குழந்தைக்கு பால் கொடுத்த தாய் – அபராதம் விதித்த அதிகாரிகள்..!!
சுவிட்சர்லாந்தில் பசியால் துடித்த குழந்தைக்கு பால் கொடுத்த தாய்க்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பைல் நகரத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. மகப்பேறு விடுப்பிலிருக்கும் ஆசிரியை Stefanie, தனது 3 மாத குழந்தையுடன் காரை ஓட்டிச்சென்றுள்ளார்.
பயனத்தின் போது குழந்தை பசியால் அழுததால் காரை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தி குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். மருத்துவரின் ஆலோசனை படி குழந்தைக்கு பால் கொடுத்ததாக Stefanie விளக்கமளித்துள்ளார்.
அவர் பால் கொடுத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த போக்குவரத்து அதிகாரி வாகனத்தின் எண் பலகையை எடுத்துள்ளார். உடனே வெளியே சென்ற Stefanie, குழந்தையின் பால் கொடுக்க நிறுத்தியதாகவும், உடனே புறப்பட்டுவிடுவேன் என கோரியுள்ளார்.
ஆனால், Stefanie காரை சுவர் மீது மோதியதாகவும். அதற்காக தாங்கள் பணம் செலுத்த வேண்டும் என அயராமல் கோரியுள்ளார். இறுதியில், Stefanieவுக்கு 40 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தனது மனைவிக்கு நேர்ந்தது குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்த Stefanie கணவர், பைலிலுள்ள அதிகாரிகளை முறையாக நடக்கும்படி கேட்க முடிவு செய்துள்ளார்.
Average Rating