மாணவிகளின் ஆடைகளை பலவந்தமாக களைத்து சோதனை நடத்திய விடுதி காப்பாளர்..!!
மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து மாதவிடாய் சோதனை நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் திகதி உத்தரப் பிரதேசம் மாநிலம் முஸாபர் நகரில் உள்ள கஸ்தூரிபா காந்தி உண்டு உறைவிட பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
70 மாணவிகளின் உடைகளை களைய சொல்லி அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்களது பெண்ணுறுப்பை சோதனை செய்துள்ளார் அந்த விடுதியின் காப்பாளர் பெண்.
பள்ளி விடுதியின் கழிவறையில் மாதவிடாய் இரத்தம் இருந்ததற்காக அவர்களை நிர்வாணப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார் விடுதி காப்பாளர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர்கள் மூலம் புகார் அளிக்கப்பட்டு அதில், மாணவிகள், தங்களது உடைகளை மனிதாபிமானமற்ற முறையில் விடுதியில் அகற்றினார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.
அந்த விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
நாடு முழுவதும் பரபர்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
அவர்கள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவம் உண்மை என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
Average Rating