பாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுபடி குடும்பத்தினர் முன்பு 16 வயது சிறுமி கற்பழிப்பு..!!

Read Time:1 Minute, 23 Second

201707271047271063_Pakistani-villagers-order-revenge-rape-of-sixteen-year-old_SECVPFபாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் முல்தான் அருகேயுள்ள ராஜ்பூர் கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு 12 வயது சிறுமி உறவினரால் கற்பழிக்கப்பட்டார்.

அது குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து கூடி விசாரித்தது. அப்போது சிறுமியை கற்பழித்தவரின் தங்கையை அவரது குடும்பத்தினர் கண் முன்பு கற்பழிக்க வேண்டும் என தீர்ப்பு கூறப்பட்டது.

பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறுமியை கற்பழித்தவரின் 16 வயது தங்கையை கிராம பஞ்சாயத்து முன்பு கட்டாயப்படுத்தி இழுத்து வந்தனர். பின்னர் கற்பழிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் அப்பெண்ணை கற்பழித்தார்.

இக்கொடூர சம்பவம் போலீஸ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதை தொடர்ந்து இரு தரப்பிலும் கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நீரில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மான் குட்டியை நீச்சல்போட்டு மீட்டு வந்த பப்பி: வீடியோ..!!
Next post அஜீத்தின் ஆசை பட நாயகியின் தற்போதைய நிலை…!!