பிரபல மொடல் அழகியை நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வெளியிட்ட பொலிசார்..!!

Read Time:2 Minute, 41 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)கொலம்பியா பொலிசார் பிரபல மொடல் அழகியை காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணமாக்கி படமெடுத்து இணையத்தில் வௌயிட்ட சம்பவம் பூதாகரமாக வெடித்துள்ளது.

27 வயதான கேத்ரீன் மார்டினெஸ் என்ற மொடல் அழகியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். டெஜோ விளையாட்டின் போது மோதலில் ஈடுபட்ட மார்டினெஸ்ஸை கைது செய்த பொலிசார் காலீ காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர், கைதிகளுக்கு முன் மொடல் அழகியை கட்டாயப்படுத்தி ஆடைகளை களைய வைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

வீடியோ தீயாக பரவ பாதிக்கப்பட்ட மொடல் அழகி கேத்ரீன் மார்டினெஸ் பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

சம்பவம் குறித்து கேத்ரீன் மார்டினெஸ் கூறியதாவது, காலீ காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற பொலிசார் என்னை ஜன்னலுடன் கைவிலங்கிட்ட பூட்டினர்.

எனக்கு கால்கள் காயம் எற்பட்டிருந்ததால் கைவிலங்கை அகற்றி நாற்காலியில் உட்கார வைக்கும் படி பொலிசாரிடம் கோரினேன். ஆனால், பொலிசார் கைவிலங்கை அகற்ற வேண்டுமென்றால், ஆடைகளை களைய வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

பொலிசாரின் கட்டாயத்தின் பேரிலே நான் அவ்வாறு செய்தேன். சம்பவத்தின் போது நான் மது போதையில் இருந்ததால் சில சம்பவங்கள் மட்டுமே எனக்கு நினைவில் உள்ளது.

எனினும், அதை பொலிசார் ஒருவர் வீடியோவாக பதிவு செய்தார். தற்போது, குறித்த வீடியோ இணையத்தில் வெளியிட்ட் பொலிசார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வீடியோவை பொலிசார் தான் பதிவு செய்து வெளியிட்டதாக ஒப்புக்கொண்ட உயர் அதிகாரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏய் கிழவி மனசுக்குள்ள 16 வயசுன்னு நினைப்பா …ஏன் இந்த ஆட்டம்..!! (வீடியோ)
Next post உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள்..!!