பிக்பாஸ் வீட்டிற்கு வேலைக்குச் சென்ற வாலிபர் மரணமா? விசாரணையில் பொலிஸ்..!!

Read Time:2 Minute, 39 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக்பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தின் அருகே சூட்டிங் பணிக்காக வந்த மும்பை வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக். இவர், பூந்தமல்லி அருகில் உள்ள நசரேத்பேட்டையில் அமைந்துள்ள பிக்பாஸ் வீட்டில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தவறி விழுந்ததில் காக்கா வலிப்பு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்ற கலின் இப்ராகிம் ஷேக் இறந்துவிட்டார். இதுகுறித்து நசரேத் பேட்டை பொலிஸார் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து பிரபல ரிவியிடம் பிரபல பத்திரிக்கை ஒன்று கேட்ட போது, அப்படியொரு சம்பவமே இல்லை என்றும் அவர்களிடம் விபரத்தை தெரிவித்த பின்பு விசாரித்து விட்டு பதில் சொல்வதாகத் தெரிவித்துள்ளனர்.

அடுத்து, சில நிமிடங்களில் அந்த பத்திரிக்கையை தொடர்பில் கொண்ட அவர், ‘பிக் பாஸ் வீட்டில் அந்தச் சம்பவம் நடைபெறவில்லை. பிக் பாஸ் வீடு அமைந்துள்ள இடத்தில் இன்னும் சில சூட்டிங் நடந்துவருகிறது. அங்கு நடந்திருக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

நசரேத் பேட்டை பொலிஸார் கூறுகையில், “பிக் பாஸ் வீட்டில் வாலிபர் தவறி விழுந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் அந்த வாலிபர் நேற்றிரவு இறந்துவிட்டார். அவரது மரணம் குறித்து விசாரணை நடத்திவருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் விசாரணைக்குப் பின்பே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்றும் தற்போது முதல்கட்ட தகவலில் இறந்தவர் கலீன் இப்ராகிம் ஷேக் என்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மூட்டுகளை பலப்படுத்தும் எண்ணெய் குளியல்..!!
Next post கமல்ஹாசனை ஏமாற்றியது விஜய் டிவி?..!!