ஒருதலை காதல் வெறி: பெற்றோர் முன் துடிதுடிக்க கொல்லப்பட்ட இளம்பெண்..!!
இந்தியாவில் இளைஞர் ஒருவர் தான் ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணை கழுத்தறுத்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் பன்ஸ்வாரா நகரத்திலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது, இச்செயலில் ஈடுபட்ட ஜகதீஷ் பஞ்ஜாரா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜகதீஷ், வைசாலி ஒரே பள்ளியில் படித்து வந்த நிலையில் ஜகதீஷ் ஒருதலையாக வைசாலியை காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வைசாலி தனது வீட்டில் துணி காயவைத்துக்கொண்டிருந்த போது சுவர் ஏறி குதித்து உள்ள நுழைந்த ஜகதீஷ், கூர்மையான ஆயுதத்தால் வைசாலி கழுத்தை அழுத்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இதன்போது வீட்டிலிருந்த வைசாலியின் பெற்றோர் மகள் இரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இறுதியில் வைசாலி துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஜகதீஷ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டப்பகலில் இளம் பெண் வீட்டில் வைத்து கொல்லப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating