பிக்பாஸ் வீட்டில் புகுந்து ஆட்டையை போட்ட கில்லாடி! பிக்பாஸ் இல்லத்தில் நடக்க போகும் திடீர் மாற்றம்..!!
பிக்பாஸ்… பிக்பாஸ் பிக்பாஸ்… திரும்பிய இடங்கள் எல்லாம் பிக்பாஸ் பற்றிய பேச்சுதான்.
இந்த நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்கும் போதே திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்த நபர், அங்கிருந்த பொருட்களை ஆட்டையை போட்டார்.
பிக்பாஸ் சீசன் 1ன் 47வது நாளான இன்று ஒரு புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், வீட்டினுள் இன்று என்ன நடந்தாலும் அதை கண்டுகொள்ளக் கூடாது என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் ஒரு நபர் உள்ளே நுழைந்து அவர்கள் சமைத்துக்கொண்டிருந்தை எடுத்து சாப்பிட்டார்.
அதன் பின் அவர்கள் தினமும் பயன்படுத்தும் சில பொருட்களை ஒரு சாக்குப்பையில் போட்டு எடுத்து சென்று விட்டார்.
எதையும் கண்டு கொள்ளக்கூடாது என்பதால், தங்களுடைய பொருளை எடுத்து போகும் போது தடுக்க முடியாமல் போட்டியாளர்கள் அவதி பட்டனர்.
கொள்ளை அடிக்க வந்தவரை போல, அடுத்து வந்த கோமாலி அனைவரையும் வம்பிழுக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
லக்ஜுரி பட்ஜெட் என்ற பெயரில் காபி பொடி, சாக்லெட் பொடிக்காக சிரிக்காம இருக்கீங்களேன்னு சினேகனிடம் வம்பிழுத்தார்.
அது மட்டும் இல்லை இன்னும் அடுத்து வரும் நாட்களில் பிக்பாஸ் இல்லங்களில் புதிய மாற்றங்கள் பல நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் கூறுவதைப் பார்த்தால், ஒருவேளை இந்த வாரமே நடிகை ஓவியா திரும்ப வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating