புலிகளுக்கு இரையாக்கப்பட்ட கழுதை… மிகவும் அதிர்ச்சிக் காட்சி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 26 Second
மிருகக்காட்சி சாலை என்பது மிருகங்களை பார்த்து மகிழ்வதற்காகவே அமைக்கப்படுகின்றது. மிருகக்காட்சி சாலையில் உள்ள மிருகங்களுக்கு வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டு வழங்கப்படுவதே வழக்கம்.
ஆனால் வழக்கத்துக்கு மாறாக சீனாவில் மிருகக்காட்சி சாலையொன்றில் புலிகளுக்கு கழுதையை உயிருடன் இரையாக கொடுக்கப்பட்ட அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது.
மிருகக்காட்சி சாலையில் உள்ள கழுதை ஒன்றினை மிருகக்காட்சி சாலை ஊழியர்கள் புலிகளின் இருப்பிடத்தில் உள்ள நீர் தேக்கம் ஒன்றினுள் தள்ளி விடுகின்றனர். அதனை பார்த்த இரண்டு புலிகள் நீர் தேக்கத்தினுள் பாய்ந்து கழுதையை கடித்து குதறுகின்றன.
இந்த அதிர்ச்சி காணொளியை பார்த்த நெட்டிசன்கள் பலர் இது ஒரு மிகவும் கொடூரமான மிருகவதை என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் சிலர் இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று நியாயப்படுத்தியுள்ளனர்.
Average Rating