100 வருட பொம்மையால் வீட்டில் நடந்த அமானுஷ்ய நிகழ்வுகள்: வைரல் வீடியோ..!!
நூறு வருடங்களாக பரண் மேல் கிடந்த பொம்மையால் வீட்டில் நடந்த அமானுஷ்ய விடயங்களை பெண் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
ஸ்காட்லாந்தின் Glasgow நகரில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் Natalie Mellon (33). வீட்டின் பரண் மேல் இருந்த 100 வருட பொம்மை Natalie கைக்கு கிடைத்துள்ளது.
பொம்மையை எடுத்த நொடியிலிருந்து Natalie வீட்டில் சில அமானுஷ்ய விடயங்கள் நடந்துள்ளது.
அதாவது, அவர் வீட்டில் இருக்கும் நாய் பொம்மையை பார்த்து பயத்தில் குரைத்து கொண்டே இருப்பது, வீட்டு சமையலறையின் கதவுகள் தானாக திறந்து கொள்வது, வீட்டிலிருக்கும் கத்திகள் தானாகவே கீழே விழுவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.
இதையெல்லாம் Natalie வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.
இது குறித்து Natalie கூறுகையில், என் வீட்டில் நான்கு நாய்கள் உள்ளது. பொம்மையை பார்த்தும் பயப்படும் நாய்கள் அது இருக்கும் அறைக்கு போகவே நடுங்குகின்றன என கூறியுள்ளார்.
பொம்மையால் வீட்டில் எதோ விசித்தரமாக நடப்பது மட்டும் கண்கூடாக தெரிகிறது.
என் வீட்டில் தங்கியிருந்த தோழி, இரவில் யாரோ கத்தும் சத்தம் கேட்பதாக கூறுகிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக கதவுகள் எல்லாம் மூடிய அறையில் பொம்மையை வைத்து விட்டு தூங்கினால், அடுத்த நாள் அறையின் வெளியில் பொம்மை உள்ளது என Natalie கூறியுள்ளார்.
Average Rating