வகுப்பறையில் மாணவர்களின் முன்பு ஆசிரியைக்கு நடந்த கொடூரம்..!!
பெங்களூரில் மாணவர்கள் முன்பே பள்ளி ஆசிரியைக்கு தீ வைத்த சம்பவம் பயங்கர அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.
பெங்களூரில் உள்ள மகடி தாலூக்காவில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் சுனந்தா ஸ்ரீ. இவருக்கு வயது 50.
சுனந்தா 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சமூக அறிவியல் பாடத்தை நடத்தி வருகிறார்.
மாணவர்களுக்கு இவர் பாடம் நடத்திகொண்டிருந்தபோது, ஒருவர் வகுப்பறைக்குள் நுழைந்தார். சிறுது நேரம் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உடனே அந்த நபரை வெளியேறுமாறு அவர் கூறியதும், தன்னிடம் இருந்த மண்ணெண்ணையை ஆசிரியை மீது ஊற்றி தீ வைத்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்திவிட்டு அந்த நபர் தப்பிசென்று விட்டர். உயிருக்கு போராடிய சுனந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பிச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
Average Rating