தலைமுடி கருமையாக இந்த எண்ணெய் போதும்..!!
குளிர்ச்சி தன்மை அதிகம் மிகுந்த விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தலையில் தடவி வந்தால், தலைமுடியின் கருமை மற்றும் அடர்த்தியை அதிகரிக்கலாம்.தலைமுடி கருமைக்கு என்ன செய்ய வேண்டும்?டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய்யை 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து சூடு செய்து முடியில் தடவ வேண்டும்.
ஒரு துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றி, அதன் சூடு உள்ளே இறங்கச் செய்து, பின் தலையில் ஷாம்பூ போட்டு கழுவ வேண்டும்.ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் ஆகியவை சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து, அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.
சீயக்காய், வெந்தயம், பச்சைப்பயறு, புங்கங்காய் ஆகியவை எடுத்து அரைத்து, அந்தக் கலவையை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடி நன்கு வளரும்.கசகசா, அதிமதுரம் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து அதை பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி ஊறிய பின் குளிக்க வேண்டும்.தேங்காய் எண்ணெயில் காய வைத்த செம்பருத்திப் பூ மற்றும் ஆலமரத்தின் இளம் வேர்களை பொடி செய்து அதை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடி கறுப்பாகும்.
சீயக்காய்த் தூளுடன் தண்ணீருக்குப் பதில் மோர் விட்டுக் கரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால், தலை முடியில் உள்ள அழுக்கு சுத்தமாகும்.வெங்காயம், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி அதை இரவு முழுவதும் ஒரு செப்புப் பாத்திரத்தில் போட்டு அதன் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடியில் மசாஜ் செய்ய வேண்டும்.
Average Rating