அந்த ஒரு அதிசய நிகழ்வால், என் வாழ்க்கையே மாறிப்போனது! கலா மாஸ்டரின் பின்னணி..!! (VIDEO)
கலா மாஸ்டர் சினிமா துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். பல முக்கிய நடிகர், நடிகைகளின் படங்களுக்கு நடன இயக்குனராக இருந்திருக்கிறார்.
விநாயகர் சதுர்த்தி நன்னாளில் அவர் தன் மனம் திறந்து பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். கோவிலுக்கு போனால் அமைதி, சந்தோசம், நன்மை கிடைக்கும்.
ஆனால் எனக்கு கடவுளே கிடைத்திருக்கிறார் என கூறுகிறார். 12 வருடங்களுக்கு முன் நவராத்திரி பண்டிகை நேரத்தில் இவர் சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கு ஒரு குருஜி ஒருவர் விநாயகர் சிலை ஒன்றை எண்ணெய்க்குள் முக்கி பூஜை செய்து கொண்டிருந்தார்.
என்ன சிறப்பு என்ன கேட்டபோது பண்டிகை முடிந்ததும் யாரோ ஒரு விஐபி வீட்டுக்கு இவர் போகப்போகிறார் என சொன்னாராம்.
பண்டிகை முடிந்து கோவிலுக்கு நான் மீண்டும் சென்ற போது, யாரோ ஒரு குழந்தை என கலா மாஸ்டர் வீட்டுக்கா இந்த பிள்ளையார் என கேட்க உடனே குருஜி இந்த பிள்ளையாரை கலா வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என சொன்னாராம்.
பின் இனி உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் என அவர் சொன்னபடி என் வாழ்வில் நிறைய மாற்றங்கள், முன்னேற்றங்கள் வந்தது.
எல்லாம் அந்த பிள்ளையார் சிலை தான் என கூறுகிறார் கலா மாஸ்டர்.
Average Rating