இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை: அதிசயம் என கொண்டாடும் பெற்றோர்..!! (வீடியோ)
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் குறைபாடு காரணமாக இரண்டு தலையுடன் பிறந்த குழந்தையை அதன் பெற்றோரும் கிராம மக்களும் அதிசயம் என கொண்டாடி வருகின்றனர்.ஹரியானாவின் மிகவும் பிந்தங்கிய கிராமம் ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு குழந்தை ஒன்று பிறந்தது.
பிறந்த குழந்தை இரண்டு தலையுடன் இருந்ததால் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாலி என பெயரிடப்பட்டுள்ள குறித்த குழந்தையானது Craniofacial Duplication எனும் குறைபாடால் இதுபோன்று பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற குறைபாடால் பிறக்கும் குழந்தைகள் உடல் ரீதியாக மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் என எண்ணிய மருத்துவர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறது.
இரண்டு தலையுடன் பிறந்த குறித்த குழந்தையானது எவ்வித சிரமமும் இன்றி உணவு உட்கொள்கிறது எனவும், நன்றாக மூச்சு விடுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் ஏழ்மை நிலை காரணமாக அந்த பெற்றோர் சிறப்பு மருத்துவரிடம் குறித்த குழந்தையை எடுத்துச் செல்வதில் சிக்கல் இருப்பதாகவும், மட்டுமின்றி குழந்தையை இதே நிலையில் அதன் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இரு தலையுடன் குழந்தை பிறந்த தகவல் பரவியதும் அந்த கிராம மக்கள் ஒன்றாக திரண்டு வந்து பார்த்து சென்றுள்ளனர். சிலர் குழந்தையின் நிலை கண்டு பரிதாபப்பட்டனர். இருப்பினும் குறித்த குழந்தையை அதிசயப் பிறவி என அதன் பெற்றோர் கொண்டாடி வருகின்றனர்.
Average Rating