நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை : நிக்கி கல்ராணி..!!
நிக்கி கல்ராணி தமிழ்ப்பட உலகில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார். திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் ‘நெருப்புடா’ படத்தில் விக்ரம் பிரபுவின் ஜோடியாக நடித்துள்ளார். அந்த அனுபவம் பற்றி கூறுகிறார்…
“இதுபோன்ற படங்களில் இதுவரை நடித்ததில்லை. ‘நெருப்புடா’ படத்தில் ‘ரிஸ்க்‘ எடுத்து நடித்தேன். இதில் மருத்துவ கல்லூரி மாணவியாக வருகிறேன். நான் டாக்டர் ஆகவேண்டும் என்பது என் அம்மாவின் ஆசை. எனக்கும் அந்த ஆசை இருந்தது. எனவே அறிவியல் பாடம் எடுத்து படித்தேன். ஆனால் சினிமாவுக்கு வந்து விட்டேன். நான் நடிகை ஆவேன் என்று முதலில் நினைக்கவில்லை.
‘நெருப்புடா’ படத்தில் நடிக்கும் போது விக்ரம் பிரபு பற்றி நேரில் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மரியாதையாக அன்பாக பழகுவார். அதிகம் அலட்டிக் கொள்ள மாட்டார். அமைதியானவர்.
பலரும் நடிக்க தயங்கும் கதைகளை நான் தேர்வு செய்வேன். அதுபோன்ற படங்களில் நடித்து வெற்றி பெற்று இருக்கிறேன். என் மனதுக்கு பிடித்த சவாலான கதைகளையே தேர்வு செய்து நடிக்கிறேன். இப்போது நான் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘பக்கா’ படங்களில் நடிக்கிறேன். எல்லா படங்களுமே வித்தியாசமானவை.
தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்கள் அன்பும், பாராட்டும், ஆதரவும் எனக்கு இந்த இடத்தை கொடுத்து இருக்கிறது” என்றார்.
Average Rating