1.5 லிற்றர் தண்ணீரில் குளிக்க முடியுமா?… கலெக்டருக்கே குளித்துக் காட்டிய அதிசய நபர்..!! (வீடியோ)
ஒரு நாளைக்கு 3 லிற்றர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பொதுவாக சொல்வார்கள். அதுவே குளிப்பதற்கு என்றால் நாம் அனைவரும் அதிக அளவில்லான தண்ணீரை பயன்படுத்துவோம். குறைந்த பட்சமாக ஒரு பக்கேட்-20 லிற்றர் தண்ணீரையாவது உபயோகிப்போம்.
ஆனால் தண்ணீர் பஞ்சத்தின் காரணமாக ஒரு இளைஞன் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் சேர்த்து வெறும் 2 லிற்றரையே உபயோகித்து வருகிறார்.
படிக்க வசதியில்லாமல் ஆடு மேய்த்து வரும் இவர் தர்மபுரியை சேர்ந்தவர். சுற்று வட்டார கிராமங்களில் ஆடு மேய்க்க செல்லும் போது தண்ணீருக்காக மக்கள் கஷ்டப்படுவதை பார்த்த அவர் தனக்குத்தேவையான 2 லிற்றர் தண்ணிரை எடுத்துச்சென்று அதை குளிக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவேன் என்கிறார்த
ன் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1.5 லிற்றர் தண்ணீரில் குளித்து காண்பித்தேன். இதை அறியவந்த தர்மபுரி மாவட்ட கலெக்டர் பள்ளி ஒன்றில் செய்து காண்பிக்குமாறு கேட்டுக்கொண்டபோது தான் பலருக்கும் தெரிய வந்தது.
இவர்1.5 லிற்றர் தண்ணீரில் இரண்டு முறை ஷாம்பும், இரண்டு முறை சோப்பும் போடுவாராம். மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதற்கே இவ்வாறு செய்து வருவதாகவும் குளியல் ராமசாமி கூறியுள்ளார்.
Average Rating