பத்தொன்பது வயது மகள் கொலை; தந்தை பொலிஸில் சரண்..!!

Read Time:1 Minute, 39 Second

6_Murderமன நலம் பாதிக்கப்பட்ட தனது பத்தொன்பது வயது மகளைக் கொலை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி ஆதிகேசவன். இவரது மனைவி மோகனா. இவர்களுக்கு அஜித் என்றொரு மகனும், கௌசல்யா என்றொரு மகளும் உள்ளனர். கௌசல்யா மன நலம் குன்றியவர்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன் ஆதிகேசவனும் மோகனாவும் பிரிந்துவிட்டனர். பிள்ளைகள் இருவரும் தம் தாயுடனேயே வாழ்ந்து வந்தனர்.

சில மாதங்களுக்கு முன், மகளைத் தன்னால் வளர்க்க முடியாது என்று கூறி, கௌசல்யாவை ஆதிகேசவனிடம் விட்டுச் சென்றார் மோகனா. இதனால் அதிருப்தியடைந்தாலும் மகளைப் பராமரித்து வந்தார் ஆதிகேசவன்.

இந்நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, கௌசல்யா வீட்டிலிருந்த பாத்திரங்களை எடுத்து வீசி ஆர்ப்பாட்டம் செய்தார்.

இதனால் கோபமுற்ற ஆதிகேசவன் ஒரு நைலோன் கயிற்றால் கௌசல்யாவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்தார்.

பின்னர், கோயம்பேடு பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற அவர், நடந்ததைக் கூறி அங்கே சரணடைந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 999 காண்டம்கள், உள்ளாடை பூங்கொத்துக் கொடுத்து காதலியிடம் ஓகே வாங்கிய ஆண்..!!
Next post கணவருக்கு தற்கொலை மிரட்டல் விடுத்த பிரபல நடிகை..!!