உலகின் அடுத்த புரூஸ் லீ இவர்தான் 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்த வீடியோ..!!

Read Time:4 Minute, 18 Second

உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் என்பது இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது.ஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள் 33 வருடங்களுக்கு பிறகு மருத்துவ அறிக்கை மூலம் கசிந்துள்ளது.அதன்படி அவர் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்பதே அதன் முக்கிய குறிப்பாகும். இந்தக் காெலைக்கு முக்கியமான காரணம் அவரது மனைவி என்பது தான் பேரதிா்ச்சிக்குரிய விடயமாகும்.

அன்று நடந்தது என்ன?புரூஸ் லீ உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் தனது இல்லத்திலிருந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டார். அப்பொழுது அவர் வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிப்படைந்திருந்தார். உடனடியாக அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அந்த நிலைமைக்கான காரணம், பெருமூளை வீக்கம் என கண்டறிந்தனர்.

மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தைக் குறைக்க முடிந்தாலும் மீண்டும் தலைவலி ஏற்பட்டவண்ணமேயிருந்தது. இதனால் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டது. தொடர்ந்தும் சிகிச்சையளித்துவந்த மருத்துவா்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

சிகிச்சைகள் பலனின்றி பரிதாப மரணத்தைத் தழுவினாா் புரூஸ் லீ.இந்த நிலையில், ”புரூஸ் லீ மரணத்தில் எந்தவித மர்மமும் இல்லை, அது, ஒரு மனைவியின் மிகப்பெரிய துரோகத்தால் நடத்தப்பட்ட ஒரு படுகொலை தான்” என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் அண்மையில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்படி என்னதான் சொல்லப்பட்டிருந்தது?புரூஸ் லீயின் மரணத்துக்கான காரணம் திட்டமிட்ட சதி நடவடிக்கையாகும். அதாவது, ஆஸ்பிரின் மருந்து கூல்பானத்துடன் அதிக அளவில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே அவரது மரணத்தை விரைவுபடுத்தியது.சாகும் விளிம்பில் இருந்தபோது, புரூஸ் லீ எதோ சொல்ல முற்பட்டார், ஆனால் அவர் எதையும் சொல்வதற்கு அவரது மனைவி அனுமதிக்கவில்லை. இதனால் அவரது மனைவியை வெளியே அனுப்ப முயன்றோம், ஆனாலும் அவர் செல்ல மறுத்துவிட்டார்.

அம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு வரும்போது 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் புரூஸ் லீயின் மனைவி சொன்ன காரணத்தையே மருத்துவமனை நிர்வாகம் திருப்பிச் சொல்ல முற்பட்டது.

லீ இறப்பதற்கு முன்பே அவர் இறந்து விட்டதாக ஒரு வதந்தி செய்தி வெளியே பரவியது. இதில் மருத்துவமனை நிர்வாகமும் சம்மந்தப்பட்டிருந்தது. ஏனெனில் மருத்துவமனை நிர்வாகமும் புரூஸ் லீ மரணிப்பதையே ஆவலுடன் எதிர் பார்த்தது.எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே உலகின் அபாரத் திறமையாளன் வீழ்ந்தான். புரூஸ் லீ இறந்த சில நாட்களிலேயே அவருடைய மனைவி அமெரிக்காவுக்குப் பறந்தார்.ஒரு மோசமான மனைவியின் துரோகத்தால் தூய வீரன் சிதைக்கப்பட்ட வரலாறு இதுதான்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயநிதியுடன் ஜோடி சேரும் மாதவன் பட நாயகி?..!!
Next post வருடத்திற்கு 2 படங்கள்: சிவகார்த்திகேயனின் புதிய திட்டம்..!!