அரசியல் பேச்சுகளுக்கு பிறகு களத்தில் குதித்த கமல்! வைராலகும் காணொளி..!!
அரசியல் பேச்சுகளுக்கு பிறகு, முதல் முறையாக நேரடியாக மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் களம் குதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன், அரசியல் குறித்த பேச்சுக்களை அதிகமாக பேசி வருகிறார். டிவிட்டர், பிக்பாஸ் என எல்லா இடங்களிலும் கமல் இதுகுறித்த பேச்சுக்களை முன் வைத்தார்.
இதுகுறித்து ஆளும் கட்சியினர் விமர்சனங்களையும் செய்ததுண்டு. கமல் டிவிட்டருக்குள் ஒளிந்து கொண்டார் என்று விமர்சனங்களை அவர்கள் முன்வைத்தனர்.
கமல் டிவிட்டர் பக்கத்திலும் அவரது ரசிகர்கள் பலரும் கூட நீங்கள் களத்திற்கு வாருங்கள் என பின்னூட்டம் அனுப்பினர். இவ்வாறு தொடர்ச்சியாக பல தரப்பிலிருந்தும் கோரிக்கைககள் வலுத்து வந்த நிலையில், எண்ணூர் துறைமுகம் பகுதியில் கமல் நேரடியாக ஆய்வு செய்துள்ளார்.
அரசியலில் நான் எப்போதோ குதித்துவிட்டேன் என்றும், தனிக்கட்சி தொடங்கப்போகிறேன் என்றும் ஊடகங்கள் வாயிலாக கூறி வந்த கமல், முதல் முறையாக அந்த பேச்சுக்களுக்கு பிறகு களத்தில் குதித்துள்ளார்.
Average Rating