சீனாவில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி.யால் பாதிப்பு
Read Time:1 Minute, 8 Second
சீனாவில் கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 192 பேர் எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவர்களில் 25 சதவீதத்தினரே முறையாக மருத்துவமனைகளில் சோதனை செய்வதாகவும், அதில் 8 சதவீதத்தினரே உரிய சிகிச்சைப் பெறுவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் மருத்துவச் சோதனையின்போது 1 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், 50 ஆயிரம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீனாவில் கடந்த ஆண்டு நிலவரப்படி, 6.5 லட்சம் பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.