பாடசாலை மாணவர்கள் ஐவர் ஹெந்தலை கடலில் மூழ்கிப் பலி
Read Time:1 Minute, 16 Second
வத்தளை ஹெந்தல கடற்கரைப்பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை நீராட சென்ற ஐந்து பாடசாலை மாணவர்கள் கடல்அலை இழுத்து செல்லப்பட்ட நிலையில் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது அங்கொடையைச்சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஐவரே இவ்வாறு உயிரிழந்தனர் என்று வத்தளைப் பொலிஸார் தெரிவித்தனர் ஐந்து மாணவர்களில் நால்வர் நீரிலேயே உயிரிழந்தனர் என்றும் மற்றையவர் காப்பாற்றப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் வத்தளைப்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் இதேவேளை அதேமாதத்தில் மாத்திரமே அந்தப்பகுதி கடலில் மூழ்கி இதுவரை 10பேர்வரை கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
Average Rating