அடையாள அட்டை வைத்திராத 22பேர் கண்டியில் கைது
கண்டியில் பாதுகாப்பினை பலப்படுத்தும் பொருட்டு கண்டி பொலிஸார் வெள்ளிக்கிழமை காலை முதல் இரவுவரை மேற்கொண்ட திடீர்சோதனை நடவடிக்கையின் போது அடையாள அட்டை வைத்திராத 22 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டிநகரவீதிகள், பஸ்நிலையங்கள், புகையிரதநிலையம், மத்தியசந்தை உட்பட அனைத்து இடங்ளிலும் சோதனை நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். இச்சோதனை நடவடிக்கைகளுக்கு மோப் பநாய்களையும் பொலிஸார் ஈடுபடுத்தியிருந்ததுடன் 2000 சிவில் பாதுகாவலர்களையும் உதவிக்காக அமர்த்தியிருந்தனர். கண்டிமாநகரம் மற்றும் பிரதேசங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசயிமானதொன்று எனவே தொடர்ந்து மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும் என பிரதி பொலிஸ்மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Average Rating