காதில் இரைச்சல் கேட்பது அறிகுறியா?..!!
விமானத்தின் ஓசை, கடல் அலைகளின் இரைச்சல், வாகனங்களின் ஒலி, யாராவது பேசிக் கொண்டிருப்பது போன்று அல்லது கூட்ட நெரிசலில் வரும் சப்தங்கள் இதுபோன்ற பல இரைச்சல் சிலரின் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இந்த பாதிப்பு உள்ளவர்களின் காதில் மெதுவாக அல்லது வேகமாக சப்தங்கள் கேட்கலாம். இப்பிரச்சனையால் மனதின் அமைதி, உறக்கம் கெட்டுப்போகும். இப்பாதிப்பிற்கு Tinnitus என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
காதில் இரைச்சல் கேட்பது ஏன்?
காதுகளில் ஏற்படும் அழுக்கு, எபோதும் ஹெட்போன் பயன்படுத்துவது, அதிக சப்தத்தில் பாடல்களைக் கேட்பது ஆகிய பழக்கம் உள்ளவர்களுக்கும், காது கேட்பதில் குறைபாடு உள்ளவர்களுக்கும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
காதில் நச்சுத் தொற்று ஏற்பட்டு, சீழ் வடிந்தால், அது காதில் இரைச்சல் ஏற்பட ஒரு காரணமாக அமையும்.சிலர் இரைச்சல் மிகுந்த இடங்களான விமானம் மற்றும் இரயில் நிலையம் இருக்கும் இடத்தில் வசிப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வெடிகுண்டு போன்ற அதிக சத்தங்கள், காதில் உள்ள உட்செவியில் உள்ள முக்கியமான கொக்கிலியா எனும் மென்மையான எலும்பையும் அதில் இருந்து பிரியும் நுண்ணிய ஒலி அலையைக் கடத்தும் நரம்புகளையும் பாதித்து, சிதைத்து விடும்.
இந்த உட்செவியின் பாதிப்புகள் இருந்தால் ஒலி நரம்புகளின் செயலிழந்து காதில் ஏதோ இரைச்சல் மற்றும் தெளிவில்லாத சப்தங்கள் தோன்றும்.அளவுக்கு அதிகமாக காபி மற்றும் மது அருந்துவது, புகையிலை போன்ற போதைப் பொருட்கள் அதிகம் உபயோகிப்பது ஆகிய காரணத்தினால் உட்செவி பாதிப்புகள் ஏற்படுகிறது.
தடுப்பது எப்படி?
நல்லெண்ணையில் கிராம்பை சேர்த்து, சூடாக்கி அதை அவ்வப்போது காதில் ஓரிரு துளிகள் விட காது வலி, காதில் கேட்கும் சத்தம் போன்றவை குறையும்.
தும்பைப்பூ, சுக்கு ஆகிய இரண்டையும் தூளாக்கி, அதை பெருங்காயத் தூளுடன் கலந்து நீரில் போட்டு கொதிக்க வைத்து, குடித்து வரலாம்.
மிளகு மற்றும் பூண்டை இடித்து சாறு எடுத்து, அந்தச் சாற்றில் ஒரு துளியை, சத்தம் கேட்கும் காதில் விட்டு வரலாம்.தண்ணீர், துளசிச்சாறு மற்றும் தேன் ஆகிய அனைத்தையும் கலந்து, பருகி வர காதில் கேட்கும் சப்தங்கள் குறையும்
Average Rating