விடுதலைப்புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 33பேர் இத்தாலியில் கைது செய்யப்பட்டுள்ளனர் இத்தாலியின் பயங்கரவாத தடுப்புப் பிரிவினராலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளினால் இத்தாலியில் பலநகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாவது சம்பவத்தில் இத்தாலியின் பிரதான நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 28பேர் கைது செய்யப்பட்டனர் அதேவேளை பலர்மோ என்ற நகரில் மேறn;காள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 5பேர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் உறுப்புரிமை பெற்றிருப்பதுடன் அவர்களுக்கு நிதிசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டே கைது செய்யப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating