மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் ஜே.வி.பி மனு
வடமத்திய மாகாணசபை மற்றும் சப்பிரகமுவ மாகாணசபை கலைக்கப்பட்டடையை ஆட்சேபித்து ஜே.வி.பிசார்பில் நேற்று உயர்நீதிமன்றத்தில் இரு அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இந்த சபையில் அங்கம் வகித்த ஜே.வி.பியின் உறுப்பினர்களான ஆர்.கே இந்திராநந்த மற்றும் கமால்நந்தசேன பிரேமரத்ன ஆகியோர் சார்பில் இந்தமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன இருமனுக்களிலும் மேற்படி சபைகளின் ஆளுநர்கள் உட்பட எண்மர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் சபைகள் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உடனடியாக இடைக்கால தடை உத்தரவுவிடுக்குமாறும் சபைகலைக்கப்பட்டமை தவறானது என உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது மேற்படி இருசபைகளினதும் எதிர்கட்சி தலைவர்களான ஐக்கிய தேசிய கட்சிய உறுப்பினர்கள் இருவர் ஏற்கனவே இதுபோன்றஅடிப்படை உரிமை மீறல் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தமை தெரிந்ததே.
Average Rating