அகதிகள் போர்வையில் ஊறு விளைவித்தால்.. விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை!
Read Time:1 Minute, 0 Second
அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் ஊடுறுவி, இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்போரை அனுமதிக்க முடியாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விடுதலைப் புலிகளுக்கு முதல்வர் கருணாநிதி மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச்செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாநாட்டுக் கூடத்தில், முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் 2 நாள் மாநாடு தொடங்கியது. மாநாட்டின் தொடக்கமாக ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உரையாற்றினார்.
Average Rating