தாயின் சாம்பலை உணவாக சாப்பிடும் மகள்… கலங்க வைக்கும் காரணம்..!!
இங்கிலாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது தாயின் சாம்பலை கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மதிய உணவாக சாப்பிட விருப்பதாக தெரிவித்துள்ளார்.
Kent பகுதியில் தனது இரு குழந்தைகளுடன் வசித்து வரும் Debra Parsons என்பவரது தாய் கடந்த மே மாதம், நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துவிட்டார்.
அவரது உடல் எரிக்கப்பட்ட சாம்பலை பத்திரமாக பேணிக்காத்து வரும் Debra Parsons, கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மதிய உணவாக தனது தாயின் சாம்பலை சாப்பிடவிருக்கிறேன் என தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, இதனை கேட்டவுடன் மக்கள் என்னை பைத்தியமாக நினைக்கலாம். ஆனால் அதனை நான் கண்டுகொள்ளமாட்டேன். எனது தாய் இல்லாமல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட எனக்கு கவலையாக இருக்கிறது.
இதனால், அவரது சாம்பலை சாப்பிடுவதன் மூலம் அவர் என்னுள் இருப்பதாக உணர்கிறேன், நான் சுவாசிப்பதன் மூலம் அவரும் சுவாகிக்கிறார் என கூறியுள்ளார்.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று நான் தயார் செய்யும் பல்வேறு உணவுகளுடன் எனது தாயின் உடல் எரிக்கப்பட்ட சாம்பலும் இருக்கும் என கூறியுள்ளார்.
Average Rating