இத்தாலி நாட்டில் முன்னாள் காதலியை கடத்தி வீட்டு வேலை செய்ய வைத்தவர் கைது

Read Time:1 Minute, 22 Second

இத்தாலி நாட்டில் ஜெனோவா நகரில் 43 வயதான ஒருவர், தன்னை காதலித்து பிரிந்த பெண்ணை ஒரு மதுபான விடுதியில் சந்தித்தார். அவரை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. தன்னை பிரிந்த காதலியை பழிவாங்க விரும்பினார். இதற்காக அவரை மதுபான விடுதியில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து வந்தார். தன் கார் கதவை திறந்து அவரை உள்ளே தள்ளி தன் வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை தன் வீட்டு பாத்திரங்களை கழுவ வைத்தார். துணிகளை இஸ்திரி போட வைத்தார். இப்படி அவர் சித்ரவதை செய்த போது போலீசார் அவர் வீட்டு கதவை தட்டினார்கள். கதவை திறந்த அவரை அவர்கள் கைது செய்தனர். அவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்தனர். மதுபான விடுதியில் அந்த பெண் மது குடித்தபோது அவர் கடத்தப்படுவதை பார்த்த இன்னொரு பெண் தான் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தான் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிலிப்பைன்சில் கடும் சூறாவளி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 12 பேர் பலி
Next post விம்பிள்டன் டென்னிஸ் 2008: இவனோவிச், ஜான்கோவிக் முன்னிலை