மெர்சல் படத்தில் அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன்: நடிகர் விஜய் பேச்சு…!!

Read Time:2 Minute, 4 Second

அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன் என விகடன் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

அவசியம் கருதியே சர்ச்சை வசனங்களை பேசினேன் என விகடன் விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பேசினார்.

விகடன் விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. 2017-ம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை உலக நாயகன் கமல்ஹாசன் விஜயக்கு வழங்கினார். விருதை பெற்றுக் கொண்ட நடிகர் விஜய் பேசியதாவது:

தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனா எனக்கு பெருமை.

சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்னைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில், எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், இந்த விழாவில் தெறி படத்தில் இடம்பிடித்த ஜித்துஜில்லாடி பாடலுக்கு விஜயின் முன் குழந்தைகள் மேடையில் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தென் ஆப்பிரிக்காவில் மர்ம நோய்க்கு 60 பேர் பலி…!!
Next post சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறிகள்…!!