கதிர்காமம் துப்பாக்கிச் சூடு: கைதான பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்!!
கதிர்காமம் நகரில் பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கதிர்காமம் நகருக்கு அருகில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் படி, பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
எனினும், அதனை பொருட்படுத்தாது சென்ற குறித்த மோட்டார் சைக்கிள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியாகியுள்ளார்.
பின்னர், அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து, கதிர்காமம் பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
இதனால் பொலிஸ் நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறு இருப்பினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, கதிர்காமம் நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 30 திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Average Rating