சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!
புது வண்ணாரப்பேட்டை தேசிய நகரை சேர்ந்தவர் மீரா. இவருக்கு கீதா (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற 4 வயது பேத்தி உள்ளார். கடந்த 28.05.2011ம் ஆண்டு வீட்டின் அருகே கீதா விளையாடியபோது, அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (20) என்பவர், கீதாவை தூக்கி சென்று ஆட்டோவில் வைத்து தவறாக நடந்து கொண்டார்.
இது பற்றி சிறுமி தனது பாட்டியிடம் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து மீரா புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் போலீசார் வெங்கடேசன் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு நேற்று சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு குறித்து சாட்சிகள் பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெங்கடேசன் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் 10 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
Average Rating