ஓட்டோச்சாரதி நாயன்மார்கட்டில் சுட்டுக்கொலை
Read Time:46 Second
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பகுதியில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஓட்டோச் சாரதியொருவர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். நாயன்மார்க்கட்டு இராமநாதன் வீதியில் வசிக்கும் கோபாலசிங்கம் சதுர்முகன் (வயது25) என்பவரே சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவராவார் இவரது சடவம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating