ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!
Read Time:1 Minute, 0 Second
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுனாமி வீடமைப்பு திட்டம் சாந்தி நகர் சூரங்கல் – 5 பிரதேசத்தில் இன்று (14) ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா பொலிஸ் புலனாய்ப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா கிண்ணியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
32 வயதுடைய முகம்மட் நியாஸ் என்பவர் விற்பனைக்காக தமது விட்டில் பதுக்கி வைத்திருந்த வேளையிலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating