ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் 9 வீரர்கள் பலி
Read Time:1 Minute, 0 Second
ரஷ்யாவில் உள்ள செசன்யாவில் திடீரென குண்டுகள் வெடித்ததில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5.15 மணிக்கு பீரங்கி ஒன்றிலிருந்து வெடிகுண்டுகள் மற்றொரு வாகனத்திற்கு மாற்றப்படும்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ராணுவ அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்ததாகவும் இன்டர்பேக்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Average Rating