எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் ஃபத்தாஅல்சிசி மீண்டும் தேர்வு!!

Read Time:1 Minute, 57 Second

எகிப்து நாட்டின் அதிபராக அப்டெல் ஃபத்தா அல்சிசி மீண்டும் தேர்வாகி உள்ளார். எகிப்து நாட்டின் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வாரம் 3 நாட்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. முடிவில் அப்துல் அல்சிசி 97% சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்த தேர்தலில் சுமார் 21 மில்லியன் 8 லட்சத்து 387 பேர் அப்டெல் ஃபத்தா அல் சிசிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த தேர்தலில் அல் சிசியை எதிர்த்து போட்டியிட்ட மௌசா முஸ்தபா மௌசாக்கிற்கு 6 லட்சத்து 56 ஆயிரத்து 534 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையகத்தினால் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கெய்ரோ மக்கள் ஜனாதிபதி சிசிக்கான தமது ஆதரவை வெளிப்படுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தம்மை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்ட அதிபர் சிசி, எகிப்து மக்களுக்கு எந்த பாகுபாடுமின்றி பணியாற்ற இருப்பதாக தெரிவித்தார். வரும் 2022ம் ஆண்டு வ்ரை சிசி எகிப்து நாட்டின் அதிபர் பதவியில் நீடிக்க உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!!(அவ்வப்போது கிளாமர் )
Next post ரஜினி ரசிகை சீமானை வெளுத்து வாங்கி!!(வீடியோ)