மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!!
மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்கு ஹபீஸ் சயீத் மூளையாக செயல்பட்டவர். இந்திய அரசால் தேடப்படும் முக்கிய குற்றவாளி என ஹபீஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹபீஸ் சையத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை வெளிநாடு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது. முன்னதாக, ஹபீஸ் சயீத்தின் சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்கட்சியின் மத்திய தலைமையகத்தின் ஏழு உறுப்பினர்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி மும்பையில் கடல் வழியே ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்கர்கள் உட்பட 180 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஹபீஸ் சயீத்யின் அமைப்பு, முக்கிய காரணம் ஆகும். இந்த அமைப்புக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. இந்நிலையில் சில கட்சிகளை சேர்த்து பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக ஹபீஸ் சயீத் அறிவித்தார்.
ஆனால் அக்கட்சிக்கு அங்கீகாரம் அளிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து ஹபீஸ் சயீத் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் ஹபீஸ் சயீத் கட்சிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணயத்துக்கு உத்தரவிட்டது. சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருகிணைந்து செயல்பட்டு வரும் நிலையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது. இந்நிலையில் ஹபீஸ் சையத்தின் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை வெளிநாடு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் அமெரிக்கா சேர்த்துள்ளது.
Average Rating