துருக்கியில் அணிலுக்கு மறுவாழ்வு கொடுத்து மருத்துவர்கள் சாதனை!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 9 Second
துருக்கியில் கால்களை இழந்த அணில் ஒன்றிற்கு முன்பகுதியில் சக்கரத்தை பொறுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஜீவகாருண்யம் என்பது இதுதான் என்பதை உலகிற்கு அந்த மருத்துவ குழு நிரூபித்துள்ளது பொறியில் சிக்கியதால் அணி பலத்த காயமடைந்தது. உடனே கால்நடைப் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அணிலின் 2 முன்னங்கால்கள் இழந்தது. அணில் என்றாலே துறு துறுப்புடன் ஓடித் திரியும் ஆனால் காரமெல் நடக்க முடியாமல் ஒரே இடத்தில் முடங்கிக் கிடந்தது.
கால்களை இழந்து தவித்த அணிலுக்கு புனரமைப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரத்தேக சக்கரங்களை வடிவமைத்து உடலுடன் பொருத்தியுள்ளனர். இதனால் கால்கள் இல்லாமலே அணில் சுதந்திரமாக சுற்றி வருகிறது.
Average Rating