மெக்சிக்கோ-அமெரிக்கா எல்லையில் ராணுவம் குவிப்பு : சட்டவிரோத குடியேறுவதைக் தடுக்க டிரம்ப் அதிரடி!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 20 Second
மெக்சிக்கோ-அமெரிக்கா இடையே சுவர் எழுப்பும் வரை எல்லையில் ராணுவத்தை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். திட்டமிட்டப்படி இரு நாடுகளுக்கும் இடையே சுவர் அமைக்கப்படும் வரை ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பாதுகாப்புத்தறை அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு உள்நாட்டிலேயே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மெக்சிக்கோ நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர் என்பது டிரம்ப்பின் குற்றச்சாட்டாகும். இதனை தடுக்க எல்லையில் மிக உயர்ந்த கான்கிரீட் சுவர் எழுப்பபோவதாக தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Average Rating