அமெரிக்காவில் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்!!(உலக செய்தி)
Read Time:1 Minute, 21 Second
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் தாய் ஒருவர் தனது மகனை தூக்கத்திலிருந்து எழுப்பவதற்காக மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதான ஷரோன் டாபின்ஸ் என்ற பெண் ஈஸ்டர் பண்டிகைக்காக தேவாலயம் செல்வதற்காக தனது 17 வயது மகனை காலையில் எழுப்பியுள்ளார். வெகுநேரம் ஆகியும் எழாததால் அருகிலிருந்த மின்சார துப்பாக்கியை பயன்படுத்தி எழுப்பியதாக கூறப்படுகிறது.
ஆனால் போலீசார் கூறுகையில் டாபின்ஸின் மகனின் கால்களில் தழும்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஷரோன் டாபின்ஸை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், தான் துப்பாக்கியை இயக்கவில்லை என்றார். இதன்பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை போலீஸ் காவலிலிருந்து விடுவித்தார்.
Average Rating