புத்தாண்டில் பெற்ற தந்தையை அடித்து கொன்ற மகன்!!
Read Time:1 Minute, 9 Second
காலி, மஹமோதர பகுதியில் மகன் ஒருவன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் உச்சமடையவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தையை கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னரே உயிரிழந்துள்ளார்.
மஹமோதர பகுதியை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான மகனை பொலிஸாரட கொலை செய்துள்ளனர்.
பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட மகனை பொலிஸ் பாதுகாப்புடன் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating