இரு வேறு பிரதேசங்களில் இரண்டு கொலைகள்!!
Read Time:1 Minute, 17 Second
றாகம, மஹர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் றாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
றாகம, மஹர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
கொலைச் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுதவிர, குருணாகல், யன்தம்பலாவ பிரதேசத்திலும் நேற்றிரவு ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
56 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதுடன், கொலைச் சந்தேகநபரை கைது செய்வதற்காக குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating