சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் பலி!! (உலக செய்தி)
Read Time:48 Second
சத்தீஷ்கர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சண்டையில் காவலர் ஒருவர் உயிரிழந்தார். அந்த மாநிலத்தில் கிஸ்ட்டாராம் காவல் சரங்கத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் 212 வது பெட்டாலியன் பிரிவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்தார்.
Average Rating