கர்நாடக தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தமளிக்கிறது: விஜய் மல்லையா!!(உலக செய்தி)
இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா கர்நாடக தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வாக்களிப்பது என்பது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்றும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகள் காரணமாக லண்டனை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அரசியலை பின்பற்றாத காரணத்தால் கர்நாடக தேர்தல் குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்று லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட விஜய் மல்லையா மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், கடன் தொல்லையின் காரணமாக லண்டனில் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார். இதனையடுத்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் லண்டன் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார். சுமார் 17 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் விஜய் மல்லையா 9,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார்.
Average Rating