சட்டத் திருத்தம் செய்கிறது மத்திய அரசு 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் தூக்கு!!
Read Time:1 Minute, 24 Second
சிறுமிகளை மட்டுமின்றி சிறுவர்களை பலாத்காரம் செய்தாலும் கூட தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், சிறுமிகளை மட்டுமின்றி சிறுவர்களையும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கும் கொடுமை நடக்–்கிறது. இதை கருத்தில் கொண்டு, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை பலாத்காரம் செய்வோருக்கும் தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் மத்திய அமைச்சரவையில், இதற்கு ஒப்புதல் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating