ஒரு கிலோ தங்கத்துடன் இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது!!
Read Time:53 Second
சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (08) அதிகாலை 1.45 மணியளவில் இவர்கள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating