கால்நடை கடத்தல் கும்பல் அட்டகாசம்: நைஜீரிய கிராமத்தில் 45 பேர் படுகொலை!!(உலக செய்தி )

Read Time:1 Minute, 46 Second

நைஜீரியாவில் கால்நடை திருடும் கும்பல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டனர். நைஜீரியாவில் கொள்ளை, கடத்தல், கால்நடை திருடும் கும்பல் அட்டகாசம் அதிகம் இருக்கிறது. ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் நுழையும் கொள்ளை கும்பல், பொதுமக்களை தாக்கி கால்நடைகளை அபகரித்து செல்லும். இதனால், நைஜீரியாவில் உள்ள கிராமங்களில் பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கதுனா மாகாணத்தில் உள்ள ஜம்பாரா பகுதியில் இருந்து குவாசா கிராமத்துக்குள் நேற்று முன்தினம் நுழைந்த கால்நடை கடத்தல் கும்பல், அப்பகுதி மக்களை பயங்கர ஆயுதங்களில் தாக்கியது.

கொள்ளை கும்பலுக்கும், பாதுகாப்பு குழுவுக்கும் இடையே 3 மணி நேரம் கடும் சண்டை நடந்தது. அப்போது, வீடுகளுக்கு கொள்ளை கும்பல் தீ வைத்தது. இந்த சண்டையில் கிராமத்தை சேர்ந்த 45 பேர் கொல்லப்பட்டனர். 45 பேரின் சடலங்களும் புதர் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், பெண்கள் என அனைவரையும் இந்த கும்பல் வெட்டிக் கொன்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த காட்சிய நீங்க கவனிச்சிருக்க மாட்டீங்க! அசிங்கப்படுத்தியவர்களுக்கு செருப்படி கொடுத்த தோணி!(வீடியோ)
Next post கர்ப்ப கால தொற்றுநோய்களை தவிர்க்கலாமே!!(மருத்துவம்)