தகவல் திருட்டு விவகாரம்: தலைமை பதவியில் உள்ளவர்களை வேறு பணிகளுக்கு மாற்றும் பேஸ்புக்!!
Read Time:1 Minute, 1 Second
தலைமை பதவி வகிக்கும் பலரை வேறு பணிகளுக்கு மாற்றியுள்ளதாக பேஸ்புக் கூறியுள்ளது. பயனாளர் தனியப்பட்ட தகவல், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனை அடுத்து பேஸ்புக் நிறுவனம் தனது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்டுள்ளது.
அதன்படி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெஸ்ஸெஞ்சர் உருவாக்கியுள்ள பிரிவுக்கு கிறிஸ் டாக்ஸ் தலைமை வகிக்க உள்ளார். இதனால் பல பிரிவுகளில் இருந்து தகவல்கள் வெளியேறாமல் இருக்கும்படி அவர்கள் பணிபுரிய உள்ளதாக கூறப்படுகிறது.
Average Rating