33 இலட்சம் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது!!!

Read Time:1 Minute, 42 Second

சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வந்த இந்தியர் ஒருவரை இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் இந்தியவை சேர்ந்த 44 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் சென்னையில் இருந்து வந்த Spicejet விமான சேவைக்கு சொந்தமான SG 001 விமானத்தில் குறிப்பிட்ட நபர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் பயணிகள் வருகை தரும் ஒழுங்கின் ஊடாக குறித்த நபர் வருகை தரும்போதே சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 100 கிராம் எடை கொண்ட 5 தங்க பிஸ்கட்டுக்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க பிஸ்கட்கள் 33 இலட்சம் ரூபா பெறுமதியுடையவை என சுங்க ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு தங்க பிஸ்கட்டுக்களை அரசுடமை ஆக்கியதுடன் சந்தேக நபருக்கு 100,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு – தாய் பலி, மகனுக்கு படுகாயம்!!
Next post 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் – தேடும் பணி நிறுத்தப்பட்டது!!